ரயிலுடன் மோதுண்டு வவுனியாவில் ஒருவர் பலி!!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் ரயிலுடன் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற ரயில் வவுனியா தேக்கவத்தை பகுதியில் சென்று கொண்டிருக்கும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் வவுனியா கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 35 வயதான ராஜன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மரணம் விபத்தா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை இந்த விபத்தினை அடுத்து குறித்த புகையிரதம் சில மணி நேர தாமதத்தின் பின்னரே தனது பயணத்தை தொடர்ந்திருந்ததாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.