மரத்திலிருந்து வீழ்ந்ததால் ஒருவர் பலி!!

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம வெஸ்ட் 5 பிரிவு தோட்டத்தில் மரத்திலிருந்து தவறி விழுந்ததில்  குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.


நேற்று (05) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டு தேவைக்கு விறகு வெட்டுவதற்காக 150 அடி உயரத்தில் உள்ள மரத்தில்  ஏறி மரத்தின் கிளைகளை வெட்டும் போது  குறித்த நபர் கால் தவறி விழுந்துள்ளார்.

ராமன்  பாலசுப்பிரமணியம் (48 வயது)என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

இறந்தவரின் சடலம்  டயகம வைத்தியசாலையில்  வைக்கப்பட்டு  பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.