நாட்டின் கல்வித்துறையில் விரைவான மாற்றம் அவசியம்- மஹிந்த!!
ஒரு வலுவான அரசாங்கம் நிறுவப்பட்ட பின்னர் நாட்டின் கல்வித்துறை வேகமாக மாற்றப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டி- சந்தனா பெண்கள் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேசிய பாடசாலைகளை 10 அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
அதேபோன்று நாட்டுக்கு தேவையான மும்மொழிகளை கற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலைகளை அமைக்க தீர்மானித்துள்ளோம்.
சிறந்ததொரு கல்வியை மாணவர்களுக்கு பெற்றுக்கொள்ளும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்.
மானூட சமூகம் நாகரீகமான முறையில் வாழ வேண்டுமாயின் உயரிய மனித பண்புகள் மிகவும் அத்தியாவசியமாகும். இன்று பாடசாலைகளில் பிள்ளைகள் அறிவை மாத்திரமே பெற்றுக்கொள்கின்றனர்.
ஆனால் உயரிய மனித பண்புகள் குறித்து போதிக்கப்படுவதில்லை என்பது எனது எண்ணம். ஒரு நாளுக்கான பாடசாலை நேரத்தில் 40 நிமிடங்கள் மட்டுமே மதம் சம்பந்தமான கல்வி மாணவர்களுக்கு போதிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக குறுகிய எண்ணத்தையுடைய சமூகத்தை நாம் உருவாக்குகின்றோம். இதனை மாற்ற வேண்டிய காலம் வந்துள்ளதாக நான் நம்புகின்றேன்.
இதேவேளை தற்போது நாட்டில் காணப்படுகின்ற நாடாளுமன்றம் குறைந்த ஆசனங்களை கொண்டு காணப்படுகின்றது.
அதிகளவு உறுப்பினர்கள் இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதனூடாகவே நாம் செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
நாங்கள் வலுவான அரசாங்கமாக இருந்து பணியாற்றுவதற்கு எந்நேரமும் தயாராக இருக்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கண்டி- சந்தனா பெண்கள் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேசிய பாடசாலைகளை 10 அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
அதேபோன்று நாட்டுக்கு தேவையான மும்மொழிகளை கற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலைகளை அமைக்க தீர்மானித்துள்ளோம்.
சிறந்ததொரு கல்வியை மாணவர்களுக்கு பெற்றுக்கொள்ளும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்.
மானூட சமூகம் நாகரீகமான முறையில் வாழ வேண்டுமாயின் உயரிய மனித பண்புகள் மிகவும் அத்தியாவசியமாகும். இன்று பாடசாலைகளில் பிள்ளைகள் அறிவை மாத்திரமே பெற்றுக்கொள்கின்றனர்.
ஆனால் உயரிய மனித பண்புகள் குறித்து போதிக்கப்படுவதில்லை என்பது எனது எண்ணம். ஒரு நாளுக்கான பாடசாலை நேரத்தில் 40 நிமிடங்கள் மட்டுமே மதம் சம்பந்தமான கல்வி மாணவர்களுக்கு போதிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக குறுகிய எண்ணத்தையுடைய சமூகத்தை நாம் உருவாக்குகின்றோம். இதனை மாற்ற வேண்டிய காலம் வந்துள்ளதாக நான் நம்புகின்றேன்.
இதேவேளை தற்போது நாட்டில் காணப்படுகின்ற நாடாளுமன்றம் குறைந்த ஆசனங்களை கொண்டு காணப்படுகின்றது.
அதிகளவு உறுப்பினர்கள் இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதனூடாகவே நாம் செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
நாங்கள் வலுவான அரசாங்கமாக இருந்து பணியாற்றுவதற்கு எந்நேரமும் தயாராக இருக்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை