அமெரிக்க இராணுவத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்தது ஈரான்!
மூன்றாம் உலக போர் எப்போது ஆரம்பமாகும் என உலகநாடுகளே அச்சத்தை எதிர்நோக்கியிருக்கின்ற நிலையில், அமெரிக்க இராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
இதுவரை அமெரிக்காவே பல அமைப்புகளை தீவிரவாத அமைப்பு என முத்திரை குத்தி வந்தநிலையில், முதல்முறையாக அமெரிக்க இராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
ஒரு நாட்டின் இராணுவத்தை, இன்னொரு நாடு தீவிரவாத அமைப்பு என்று அறிவிப்பது இதுதான் முதல்முறை.
இதற்காக ஈரான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனை தீவிரவாத இயக்க தலைமையகமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் முப்படைகளும் தீவிரவாத இயக்கம்தான் என்று ஈரான் கூறியுள்ளது.
ஈராக்கில் உள்ள பக்தாத் சர்வதேச விமான நிலைய வளாகத்தில், கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான ஏவுகணைத் தாக்குதலில், ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காசிம் சோலெய்மனி, ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய தளபதி அபு மகாதி உள்ளிட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த கொடூர தாக்குதலை தொடந்து அமெரிக்காவும், ஈரானுக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இதுவரை அமெரிக்காவே பல அமைப்புகளை தீவிரவாத அமைப்பு என முத்திரை குத்தி வந்தநிலையில், முதல்முறையாக அமெரிக்க இராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
ஒரு நாட்டின் இராணுவத்தை, இன்னொரு நாடு தீவிரவாத அமைப்பு என்று அறிவிப்பது இதுதான் முதல்முறை.
இதற்காக ஈரான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனை தீவிரவாத இயக்க தலைமையகமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் முப்படைகளும் தீவிரவாத இயக்கம்தான் என்று ஈரான் கூறியுள்ளது.
ஈராக்கில் உள்ள பக்தாத் சர்வதேச விமான நிலைய வளாகத்தில், கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான ஏவுகணைத் தாக்குதலில், ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காசிம் சோலெய்மனி, ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய தளபதி அபு மகாதி உள்ளிட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த கொடூர தாக்குதலை தொடந்து அமெரிக்காவும், ஈரானுக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை