கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் மரணம்!!

யாழ்ப்பாணம் – நாவற்குழியில் பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தரம் 2 இல் கல்வி கற்கும் சசிதரன் எட்வட் சாமுவேல் (வயது 7) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் அருகில் இருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து சிறுவனை உடனடியாக மீட்ட உறவினர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக போதனா வைத்தியசாலையின் வட்டாரங்கள்  தெரிவித்தன.

இறப்பு விசாரணையை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மேலும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.