ஷானி அபேசேகரவிற்கு வெளிநாடு செல்ல தடை!!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


இந்த உத்தரவை இன்று (புதன்கிழமை) நுகேகொடை நீதாவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர அவரது கடமையிலிருந்து நேற்று இடைநிறுத்தப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் ஷானி அபேசேகர தொலைபேசியில் உரையாடிய குரல் பதிவுகள் வெளியாகியிருந்தமையை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேவேளை, ஷானி அபேசேகரவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது.

மேலும், விசாரணை குறித்த அறிக்கையை எதிர்வரும் 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.