கடந்த அரசாங்கத்தினால் நீதிமன்ற சுயாதீனத்தன்மை அழிக்கப்பட்டுள்ளது!!
நீதிமன்ற சுயாதீனத்தன்மை கடந்த அரசாங்கத்தினால் முற்றாக இல்லாமலாக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நீதிமன்ற சுயாதீனம் தொடர்பாக இவர்கள் கதைக்கின்றனர்.
தற்போது ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் தொடர்பான ஒலிப்பதிவுகள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோருடன் கதைக்கின்றனர். நீதித்துறையில் தலையிட வேண்டாம் அவர்களை சுயாதீனமாக செயற்பட இடமளியுங்கள் என அன்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.
சட்டவிரோத நிறுனங்களை அமைத்து அரசியல் பழிவாங்கல்களை செய்ய வேண்டாமென கேட்டுக்கொண்டோம். ஆனால் இதற்கு செவிசாய்க்கவில்லை.
ஆனால் இவர்கள் செய்த தவறுகளுக்கு இப்போது கைது செய்யப்படும் போது அதனை எதிர்க்கின்றனர்.
அன்று அப்படி செய்தவர்களே இன்று நீதித்துறை சுயாதீனம் தொடர்பாக கதைக்கின்றார்கள். இவர்களால் நீதிமன்றம் மற்றும் நீதித்துறை மீதான நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.
எவ்வாறாயினும் நாங்கள் நீதிமன்றம் மற்றும் நீதித்துறை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கையெடுப்போம்.
அன்று பொலிஸ் அதிகாரியுடன் தொலைபேசியில் உரையாடி யாரை கைது செய்ய வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் உத்தரவிட்டுள்ளனர்.
நீதிக்கட்டமைப்புக்கு செய்த அபகீர்த்தியிலிருந்து இவர்களால் தப்பிக்க முடியாது. இப்போதாவது நீதித்துறை சுயாதீனமாக செயற்பட இடமளியுங்கள் என கேட்கின்றோம்.
அத்துடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்வைத்துள்ள வேலைத்திட்டம் 100 நாட்களுக்கல்ல. 5 வருட வேலைத்திட்டமாகும். அதனை நடைமுறைப்படுத்துவதே எமது இலக்காகும்.
அதற்காகவே நாங்கள் அதிகாரத்துக்கு வந்திருக்கின்றோம். மாறாக யாரையும் பழிவாங்கும் வேலைத்திட்டம் எம்மிடமில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தது மக்களுக்கு வேலை செய்வதற்கவே அன்றி பழிவாங்குவதற்காக அல்ல என்பதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நீதிமன்ற சுயாதீனம் தொடர்பாக இவர்கள் கதைக்கின்றனர்.
தற்போது ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் தொடர்பான ஒலிப்பதிவுகள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோருடன் கதைக்கின்றனர். நீதித்துறையில் தலையிட வேண்டாம் அவர்களை சுயாதீனமாக செயற்பட இடமளியுங்கள் என அன்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.
சட்டவிரோத நிறுனங்களை அமைத்து அரசியல் பழிவாங்கல்களை செய்ய வேண்டாமென கேட்டுக்கொண்டோம். ஆனால் இதற்கு செவிசாய்க்கவில்லை.
ஆனால் இவர்கள் செய்த தவறுகளுக்கு இப்போது கைது செய்யப்படும் போது அதனை எதிர்க்கின்றனர்.
அன்று அப்படி செய்தவர்களே இன்று நீதித்துறை சுயாதீனம் தொடர்பாக கதைக்கின்றார்கள். இவர்களால் நீதிமன்றம் மற்றும் நீதித்துறை மீதான நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.
எவ்வாறாயினும் நாங்கள் நீதிமன்றம் மற்றும் நீதித்துறை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கையெடுப்போம்.
அன்று பொலிஸ் அதிகாரியுடன் தொலைபேசியில் உரையாடி யாரை கைது செய்ய வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் உத்தரவிட்டுள்ளனர்.
நீதிக்கட்டமைப்புக்கு செய்த அபகீர்த்தியிலிருந்து இவர்களால் தப்பிக்க முடியாது. இப்போதாவது நீதித்துறை சுயாதீனமாக செயற்பட இடமளியுங்கள் என கேட்கின்றோம்.
அத்துடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்வைத்துள்ள வேலைத்திட்டம் 100 நாட்களுக்கல்ல. 5 வருட வேலைத்திட்டமாகும். அதனை நடைமுறைப்படுத்துவதே எமது இலக்காகும்.
அதற்காகவே நாங்கள் அதிகாரத்துக்கு வந்திருக்கின்றோம். மாறாக யாரையும் பழிவாங்கும் வேலைத்திட்டம் எம்மிடமில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தது மக்களுக்கு வேலை செய்வதற்கவே அன்றி பழிவாங்குவதற்காக அல்ல என்பதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை