சில நாடுகள் ஈரான் வான்பரப்பை தவிர்த்து பயணிப்பதற்கு தீர்மானம்!

ஈரான் வான்பரப்பை தவிர்த்து பயணிப்பதற்கு சில நாடுகள் தீர்மானித்துள்ளன.


சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், டுபாய் உள்ளிட்ட நாடுகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.

ஈராக்கிற்கு பயணிப்பது தொடர்பாக கவனத்திற்கொள்ளுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.

ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான முறுகல் நிலை அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானத்தினை சில நாடுகள் எடுத்துள்ளன.

இதேவேளை, அமெரிக்காவும் ஈரானும் அமைதி காக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் அல் ஆசாத் விமானப்படைத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

அடுத்தடுத்து 15 தடவைகளுக்கு மேல் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.