சிங்கள மாணவர்களின் தங்குமிடத்தில் வாள்கள் மீட்பு!!!

யாழ்.பரமேஸ்வரா சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றிலிருந்து வாள் மீட்கப்பட்டிருக்கின்றது. குறித்த வீட்டில் யாழ்.பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவா்கள் தங்கியிருந்ததாக வீட்டி ன் உாிமையாளா் மற்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.


இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் இன்று காலை இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்கள் பலர் அந்த வீட்டில் தங்கியிலுள்ளனர். அந்த வீட்டின் மேற்தளத்தில்

வாள் ஒன்று இருப்பதாக வீட்டு உரிமையாளரால் தகவல் வழங்கப்பட்டது.அதனடிப்படையில் அந்த வாள் மீட்கப்பட்டது. எனினும் அதுபற்றித் தமக்குத் தெரியாது என அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் தெரிவித்தனர். விசாரணைகள் இடம்பெறுகின்றன

என்று சிறிலங்கா பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, வாள் மீட்கப்பட்ட வீட்டில் கடந்த ஆண்டு சிங்கள மாணவர்களுக்கு இடையே மோதல் இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.