நீதிமன்றில் உலங்கு வானூர்தி விபத்து தொடர்பான அறிக்கை!!

ஹப்புத்தளை - அய்ஸ்பிலி - தம்பப்பிள்ளை பகுதியில் இடம்பெற்ற இலகுரக உலங்கு வானூர்தி விபத்து தொடர்பான காலநிலை அவதான நிலையத்தின் அறிக்கை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.


கடந்த வெள்ளிக்கிழமை விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சிறந்த காலநிலை நிலவியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காற்றின் வேகமும் வழமையான அளவில் இருந்தாகவும் குறிப்பிட்டுள்ளது.

வான்படைக்கு சொந்தமான இலகுரக உலங்கு வாநூர்தி ஒன்று ஹப்புத்தளை ஐஸ்பீலி, தம்பப்பிள்ளை மாவத்தையில், விபத்துக்குள்ளானதில் விமானிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் பலியாகினர்.

இலங்கை வான்படைக்கு சொந்தமான வை - 12 ரக இலகுரக உலங்கு வானூர்தி, ஹம்பாந்தோட்டை, வீரவில வாநூர்தி தளத்தில் இருந்து கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக பயணித்த வேளையில் விபததுக்குள்ளானது.

குறித்த விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறியும் வகையில், வான்படை தளபதியின் பணிப்புரைக்கு அமைய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.