உழவு இயந்திரத்துடன் சாரதி கைது!

அனுமதிப் பத்திரம் இல்லாது மண் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்தைத் தாம் கைப்பற்றியுள்ளதாக மட்டக்களப்பு – வவுணதீவு பகுதி ஶ்ரீலங்கா பொலிஸார் தெரிவித்தனர்.


அனுமதிப் பத்திரம் இல்லாது சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் காலபோட்டமடு எனுமிடத்திற்கு விரைந்த பொலிஸார் உழவு இயந்திரத்துடன் அதன் சாரதியை இள்று வியாழக்கிழமை (09.01.2020) கைது செய்துள்ளனர்.

வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கேற்ப, உதவி பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரையும் உழவு இயந்திரத்தையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் உதவி பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம். சஜித் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.