பிணையில் விடுவிக்கப்பட்டனர் கொழும்பு பல்கலை மாணவர்கள்!!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மாணவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த மாணவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பகிடிவதையை அடிப்படையாகக் கொண்டு, கொழும்பு பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் கடந்த 7 ஆம் திகதி மாலை மோதல் ஏற்பட்டது.

பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் சிலர், முதலாம் வருட மாணவர்களை பல்கலைக்கழகத்திற்குள்ளும் பொரளையிலுள்ள மாணவர் விடுதியிலும் வைத்து கடந்த சில தினங்களாக பகிடிவதைக்கு உட்படுத்தினர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இரண்டாம் வருட மாணவரொருவர் தாக்கப்பட்டிருந்தார். இதில் காயமடைந்த மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.