அம்பாறையில் மீண்டும் கிறிஸ் மனிதர்கள்!
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் ‘கிறிஸ் மனிதர்கள் மீண்டும் அடாவடிகளில் ஈடுபட்டு, தமிழ் மக்களை அச்சுறுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
முகம் தெரியாதவாறு ‘கிறிஸ்’ மற்றும் கறுப்பு முகச் சாயத்தை பூசிக்கொண்டு நடமாடும் குறித்த நபர்கள், வீடுகளில் கொள்ளையிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சராசரியாக ஒரு நாளுக்கு ஒரு வீடு என்ற அடிப்படையில் திருக்கோவில் பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுதங்களுடன் நடமாடும் இந்த மர்ம நபர்கள் தமிழ் மக்களை துப்பாக்கி முனையில் பயமுறுத்தித் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகினறது.
இதேவேளை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கில் ‘கிறிஸ் மனிதர்கள்’ நடமாடி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் குறித்த மர்ம மனிதர்கள் யார் என்பதை கண்டுபிடித்து, இது போன்ற திருட்டுச் சம்பவங்களை தடுத்து நிறுத்தவேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
மக்கள் மத்தியில், குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தும்படியான இந்தச் சம்பவங்களில் இருந்து கோட்டாபய தலைமையிலான புதிய அரசாங்கம் தமக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என பிரதேச வாழ் மக்கள் மேலும் கூறியுள்ளனர் .
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
முகம் தெரியாதவாறு ‘கிறிஸ்’ மற்றும் கறுப்பு முகச் சாயத்தை பூசிக்கொண்டு நடமாடும் குறித்த நபர்கள், வீடுகளில் கொள்ளையிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சராசரியாக ஒரு நாளுக்கு ஒரு வீடு என்ற அடிப்படையில் திருக்கோவில் பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுதங்களுடன் நடமாடும் இந்த மர்ம நபர்கள் தமிழ் மக்களை துப்பாக்கி முனையில் பயமுறுத்தித் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகினறது.
இதேவேளை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கில் ‘கிறிஸ் மனிதர்கள்’ நடமாடி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் குறித்த மர்ம மனிதர்கள் யார் என்பதை கண்டுபிடித்து, இது போன்ற திருட்டுச் சம்பவங்களை தடுத்து நிறுத்தவேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
மக்கள் மத்தியில், குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தும்படியான இந்தச் சம்பவங்களில் இருந்து கோட்டாபய தலைமையிலான புதிய அரசாங்கம் தமக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என பிரதேச வாழ் மக்கள் மேலும் கூறியுள்ளனர் .
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை