கட்சி எனது பெறுமதியை உணரும் நாள் வரும் – ரஞ்சன்!!

ஐக்கிய தேசியக்கட்சி, எனது பெறுமதியை மிக விரைவில் உணருமென நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.


ரஞ்சன் ராமநாயக்க கைதாவதற்கு முன்னர் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து தன்னை விலக்குவதற்கு எடுத்துள்ள தீர்மானத்துக்கு நான் தலைவணங்குகிறேன்.

நான் சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்கும் ஒருவன். எனவே  கட்சியொன்றில் தொடர்ந்து இருப்பது சிரமமானது.

அத்துடன் கட்சியிலிருந்து விலக்கியதற்காக கட்சிக்கு சேறு அடிக்கும் நடவடிக்கையில் நான் ஒருபோதும் ஈடுபடமாட்டேன்.

நான் சுயாதீனமாக தேர்தலில் போட்டியிடுவேன். வெற்றியடைந்தால் நாடாளுமன்றம் செல்வேன். தோல்வியடைந்தால் சினிமாத்துறைக்கு செல்வேன்.

இன்னும் எந்தக் கட்சியென்று தீர்மானிக்கவில்லை. நான் கட்சிக்காக நிறைய பணியாற்றியுள்ளேன். எனது பெறுமதியை கட்சி  பின்னர் உணரும்” என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.