சஹ்ரான் ஹாசிமின் சகாக்கள் இருவர் கைது!

நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமின் சகாக்கள் இருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஐக்கிய அரபு அமீரகம் சென்று சந்தேகநபர்களைக் கைது செய்துள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழு, அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்து சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடுத்து நாட்டிலிருந்து தப்பியோடியதாக கூறப்படும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களை 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாவலபிட்டி – ஹப்புகஸ்தலாவை பகுதியைச் சேர்ந்த 30 வயதான மொஹமட் சலீம் அப்துல் சலாம், அம்பாந்தோட்டையைச் சேர்ந்த 37 வயதான மொஹம்மட் சஹான் மொஹம்மட் றியாஸ் அகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இரு சந்தேகநபர்களிடமும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.