15 நாட்களுக்கு வவுனியாவில் மின்சாரத் தடை!!

வவுனியாவில் 15 நாட்களுக்கு மின்சாரம் தடைப்படவுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.


அதற்கமைய நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 31ஆம் திகதி வரையில் மின்சாரம் தடைப்படும் என அச்சபை அறிவித்துள்ளது.

குறித்த தினங்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் அத்தியாவசிய பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் மின்சார சபையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நேரங்களில் வைத்தியசாலை மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கான பொது இடங்களில் முன்கூட்டியே மின் தடையை நிவர்த்தி செய்யக்கூடிய மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் அனைவரும் மின்தடையினை அடுத்து தேவையான முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சார சபை அறிவுறுத்தியுள்ளது.

மின்சாரத் தடை குறித்து முழு விபரம்..

16.01.2020 – காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை சூடுவெந்தபுலவு, அவுசதப்பிட்டிய கிராமம், சாளம்பைக்குளம், ஈரப்பெரியகுளத்திலிருந்து பூஓயா, ஈரப்பெரியகுளம் இராணுவ முகாம், பூஓயா இரானுவ முகாம்

17.01.2020 – காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை சூடுவெந்தபுலவு, அவுசதப்பிட்டிய கிராமம், சாளம்பைக்குளம்

18.01.2020 – காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை அவுசதப்பிட்டிய கிராமம்

20.01.2020 – காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை சூடுவெந்தபுலவு, பகல அளுத்வத்த கிராமம், சாளம்பைக்குளம்

21.01.2020 – காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மகாறம்பைக்குளம் , பகல அளுத்வத்த கிராமம், மதவுவைத்தகுளம், தவசிக்குளம், லக்ஸபானா வீதி, பண்டாரிக்குளம், சாளம்பைக்குளம்

22.01.2020 – காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மதவுவைத்தகுளம் கிராமம், சூடுவெந்தபுலவு, பகல அளுத்வத்த கிராமம், மகாறம்பைக்குளம், சாளம்பைக்குளம்

23.01.2020 – காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மகாறம்பைக்குளம், பகல அளுத்வத்த கிராமம், சாளம்பைக்குளம், மதவுவைத்தகுளம், தவசிக்குளம், லக்ஸபானா வீதி, பண்டாரிக்குளம், பறயனாளங்குளத்திலிருந்து முகத்தாங்குளம் வரை

24.01.2020 – காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மகாறம்பைக்குளம், பகல அளுத்வத்த கிராமம், சாளம்பைக்குளம்

25.01.2020 – காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை பகல அளுத்வத்த கிராமம், பறயனாளங்குளத்திலிருந்து முகத்தாங்குளம் வரை, மெனிக்பாம் I,II,III மற்றும் IV

27.01.2020 – காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை அவுசதப்பிட்டிய கிராமம், மகாறம்பைக்குளம் கிராமம்

28.01.2020 – மூன்று முறிப்பிலிருந்து பூஓயா வரை, Gowloom Garments, ஈரப்பெரியகுளம் இராணுவ முகாம், SLBC ஈரப்பெரியகுளம், யோசப் படை முகாம், மூன்று முறிப்பு இராணுவ முகாம், Air Point Joint Service Army Camp, BOO ஓயா,Recbo North, மதவுவைத்தகுளம் கிராமம், அவுசதப்பிட்டிய கிராமம், மகாறம்பைக்குளம் கிராமம்

29.01.2020 – மதவுவைத்தகுளம் கிராமம், அவுசதப்பிட்டிய கிராமம், மகாறம்பைக்குளம் கிராமம்

30.01.2020 – மதவுவைத்தகுளம் கிராமம், அவுசதப்பிட்டிய கிராமம், மகாறம்பைக்குளம் கிராமம், பம்பைமடு கிராமம்

31.01.2020 – அவுசதப்பிட்டிய கிராமம், மகாறம்பைக்குளம் கிராமம் ஆகிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக இலங்கை மின்சார சபையினர் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.