இடைநடுவில் பழுதானது கொழும்பு சென்ற புகையிரதம்!!

யாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் காலை 6.30 மணிக்கு சேவையில் ஈடுபடும் பயணிகள் புகைரதம் சாவகச்சேரி- சங்கத்தானை பகுதியில் பழுதடைந்துள்ளது.


அதன்பின்னர் , புதிய புகைரதம் கொண்டுவரப்பட்டு காலை 10.30 மணிக்கு அங்கிருந்து மீண்டும் கொழும்பு நோக்கி பயணமாகியுள்ளது.

காலை 6.30 மணிக்கு புறப்பட்ட புகைரதம் 7.15 மணியளவில் சங்கத்தானை பகுதியில் பழு தடைந்து நின்றுவிட்டது.

இந் நிலையில் உடனடியாக செயற்பட்ட புகைரத திணைக்களம் யாழ்ப்பாணத்திலிருந்து மற்றொரு புகைரத இயந்திரத்தை வரவழைக்கபட்டு , பழுதடைந்த புகைரதம் சாவகச்சேரி புகைரத நிலையத்திற்கு இழுத்து செல்லப்பட்டு அங்கிருந்து புதிதாக கொண்டுவரப்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்டு புகையிரதம் கொழும்புக்கு பயணமானது.

இதனால் யாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்ட நிலையில், பயணிகள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.