‘உறவுகளின் ஒரு பிடி அரிசியில் உரிமைப் பொங்கல்’!!

தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா மற்றும் பண்பாட்டு பெருவிழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.



‘உறவுகளின் ஒரு பிடி அரிசியில் உரிமைப் பொங்கல்’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பொங்கல் விழாவில் 108 பானைகளில் பொங்கல் பொங்கப்பட்டது.

தமிழர் திருநாளாம் தைத் திருநாளை தமிழர்களுடன் இணைந்து தாங்களும் பொங்கல் பொங்கி விழாவினை கொண்டாட வோண்டும் என வெளிநாட்டவர்களும் ஆர்வத்துடன் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், வடகிழக்கு மற்றும் மலையக இளைஞர், யுவதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஊறவுகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.