நான்கு இந்திய மீனவர்கள் கைது!!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனத்தைச் சேந்ர்த பாரதி, சசிகுமார், மணி, அசோக்குமார் ஆகிய நால்வருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவுக் கடற்பரப்பினருகே நேற்று இரவு தொழில் ஈடுபட்டிருந்த நிலையில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்த கடற்படையினர் மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.

இந் நிலையில் இன்று யாழ் பண்ணையிலுள்ள நீரியல் வளத் திணைக்களத்திற்கு மீனவர்கள் கொண்டு வரப்பட்டடு அங்கு பதிவுகளை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளை நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை இலங்கை கடற்படையினர் தம்மைத் தாக்கி தமது படகையும் கடலுக்குள் மூழ்கடித்தே தம்மைக் கைது செய்துள்ளதாக இந்திய மீனவர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.