சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாது செய்ய அரசாங்கம் முயற்சி – சஜித்!!

சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாது செய்து அரசாங்கத்தை தன்னகத்தே வைத்துக்கொள்ளும் நோக்கில்தான் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


பொரளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “எமக்கு வெற்றி பெறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. நாம் நிச்சயமாக இந்தத் தேர்தலில் வெற்றிப் பெறுவோம்.

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து பலமானதொரு கூட்டணியை நாம் ஸ்தாபிப்போம்.

இந்தக் கூட்டணியில் களமிறங்கி, மீண்டும் தேர்தலில் வெற்றியடைவோம். இதற்காக நாம் தயாராகிவிட்டோம்.

புதிய நபர்களுடன் பயணத்தை தொடர வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும். நாம் பதவிகளுக்காக என்றும் கவலையடைந்ததில்லை. பதவிகளைக் கொண்டு எம்மை பிரிக்கவும் முடியாது.

நாம் என்றும் மக்கள் மத்தியில்தான் இருக்கிறோம். எமது எதிர்த்தரப்பிலுள்ள அமைச்சரொருவர் கூறுகிறார், தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவர்களுக்குத் தேவை என்று.

நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அவர்களுக்கு வழங்கத் தயாராகவே இருக்கிறோம். அடுத்த வாரம் என்றாலும் நாம் தயார்.

ஏப்ரல், மே வரை இருக்க வேண்டியத் தேவையில்லை. ஆனால், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

அதைவிடுத்து, மக்களுக்கு வாக்குறுதி அளிக்காத, மக்களை முட்டாளாக்கும் வகையில், சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாது செய்யவே அரசாங்கம் முற்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதற்குத்தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இவர்கள் கோருகிறார்கள். இதுதான் இவர்களின் நோக்கமாகவும் காணப்படுகிறது” என  மேலும் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.