இலங்கையில் இருந்த பிரபல சர்வதேச ஊடகவியலாளர் திடீர் பணி நீக்கம்!!

ரஞ்சன் ராமநாயக்கவுடனான தொலைபேசி உரையாடலில் சிக்கியதையடுத்து, தனது இலங்கைச் செய்தியாளர் ஒருவரை பிபிசி பணியிலிருந்து நீக்கியுள்ளது.


கொழும்பிலிருந்து பிபிசியின் செய்தியாளராக செயற்பட்ட செய்தியாளர் அஸாம் அமீன் என்பவரே இவ்வாறு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் அவர் தொலைபேசியில் பேசிய ஒலிப்பதிவு கடந்த சில தினங்களின் முன்னர் வெளியாகியிருந்தது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்புடைய அந்த சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவு வெளியானதையடுத்து, அவரை பிபிசி பணிநீக்கம் செய்துள்ளது .

இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவுடன் உரையாடிய குரல் பதிவுகள் வெளியானதையடுத்து, பிரபல நடிகை பியூமி ஹன்சமாலி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதுடன் தனது முகநூல் பக்கத்தில் ரஞ்சனுடன் உரையாடியதற்கு வருந்துகிறேன் எனவும் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.