இன்று சீராய்வு மனு தொடர்பிலான முக்கிய அறிவிப்பு!!

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவிற்கு பிணை வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சட்டமா அதிபர் முன்வைத்த சீராய்வு மனு தொடர்பில் பிரதிவாதிகள் தரப்பிற்கு அறிவித்தல் விடுப்பது தொடர்பான கட்டளை இன்று பிறப்பிக்கப்படவுள்ளது.


குறித்த சீராய்வு மனு கடந்த 17 ஆம் திகதி கொழும்பு மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது இன்றைய தினம் அது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படும் என கடந்த 17 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிணை உத்தரவிற்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீதான விசாரணைகளுக்காக கடந்த 17 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல்நீதிமன்றில் முன்னிலையானார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தல் வழங்கப்பட்ட பிணை வழங்கல் உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது என கூறி இந்த மனு சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.