உயிர்கொண்டு எழுதப்பட்ட என் கனவுகள்!!

கார்கால
மேகத்தைப்போல
கோடைக்கால
வெயிலைப்போல
காலத்தடமாக
என் கனவுகளும்.......

என் புன்னகைக்குள்தான்
என் கண்ணீரும் இருக்கிறது.
என் மௌனங்களுக்குள்தான்
என் சிந்தனைகள் இருக்கிறது.

நீள்தெருவின் நிசப்தம் போல
என் கனவுகளும் அழகானவை.
மாபிள் சிற்பங்கள் போல
மலிந்தவை அல்ல அவை.

உயிர்கொண்டு எழுதப்பட்ட
 என் கனவுகள்
என்றோ ஒருநாள்
உருப்பெறும்.......

காலம் என் பெயரைப்
பறைசாற்றும்....
என் மேகம் என்னில்
பூச்சொரியும்.......

எனக்காய் நான்
பெருமிதம் கொள்வேன்.......

கோபிகை
Blogger இயக்குவது.