நோர்வே தூதுவர் – யாழ். மேயர் சந்திப்பு!!

இலங்கைக்கான நோர்வே நாட்டின் தூதுவர் டிரினி ஜோர்னலி ஸ்கெடல் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டை சந்தித்துக் கலந்துரையாடினார்.


இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் யாழிற்கு விஜயம் செய்த தூதுவர் குழுவினர் நேற்று (புதன்கிழமை) யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் உடன் யாழ்.மாநகர சபையில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது, யாழ். மக்களின் அரசியல் நிலைமைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக தூதுக்குழுவினருக்கு ஆளுநரால் எடுத்துரைக்கப்பட்டது.

சுமார் 2 மணித்தியாலங்களாக நடைபெற்ற இச்சந்திப்பின் பின்னர், தூதுவரால் நோர்வே நாட்டின் பிரபல இடத்தின் புகைப்படம் நினைவுப் பரிசாக ஆளுநரிடம் வழங்கப்பட்டது.

அதேநேரம், யாழ்.மாநகர முதல்வரால் நினைவுப் பரிசாக ‘யாழ்’ வழங்கி வழங்கப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.