சீனாவில் உள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் ஜனாதிபதி அதிரடி முடிவு!

சீனாவின், வுஹான் மாநிலத்தில் உள்ள அனைத்து இலங்கை மாணவர்களையும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


வுஹானில் இலங்கையைச் சேர்ந்த 30 மாணவர்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி அலுவலகம் இவர்களை நாட்டுக்கு மீள் அழைத்து வருவதற்காக பீஜிங்களில் உள்ள இலங்கை தூதரகத்தின் உதவியைப் பெறுமாறும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான செலவுகளை அரசாங்கம் ஏற்கும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.