சிவாஜிலிங்கதிற்கு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு!

நிலஅபகரிப்பிற்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகாத வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கதிற்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்கான அவர்கள் மீது முல்லைத்தீவு பொலிஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இதன்போது மன்றில் ஆஜராகாதமையினால் சிவாஜிலிங்கத்தை கைது செய்யுமாறு நீதவான் பிடியாணை உத்தரவை பிறப்பித்தார்.

மேலும் இந்த போராட்டம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட து.ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சென்ற எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலையாகியிருந்தார்.

இவ்வாறாக இருவர் மீதான வழக்கு விசாரணைகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இடம்பெற்றுவரும் நிலையில், எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றைய தினமும் நீதிமன்றிக்கு சமூகமளிக்காத நிலையில் அவருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.