யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பேரூந்தில் நடந்த பெரும் மோசடி!!


யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவை நோக்கி சென்ற பேருந்து ஒன்றில் நபர் ஒருவர் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.அவர் குறித்த பேருந்தில் பற்றுச்சீற்று வழங்கும் இயந்திரத்தை திருடிச் சென்றுள்ளார்.அந்தப் பேருந்தில் பொறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.குறித்த சந்தேகநபர் மாத்தறைப் பகுதியைச் சேர்ந்தவர் எனக் கூறப்பட்டுள்ளது.குறித்த நபர் சாரதி இருக்கைக்கு அருகில் வந்து நின்று சுற்றிலும் பார்த்து விட்டு, பேருந்து நிறுத்தப்பட்ட நிலையில் சடுதியாக அதை எடுத்துக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கி ஓடியுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
Blogger இயக்குவது.