பேருந்தில் பெண்ணுக்கு தொல்லைகொடுத்தவர் கைது!

புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பஸ் ஒன்றில் பெண்ஒருவருக்கு தொல்லை கொடுக்கும் வகையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சந்தேக நபர் ஒருவரைமுந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


இச்சம்பவத்தில்45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரும் குறித்த பெண்ணும் ஒரே ஆசனத்தில் அமர்ந்துபயணித்துக் கொண்டிருந்தபோது குறித்த நபர், பேருந்து பயணத்தை ஆரம்பித்தசற்று நேரத்திலிருந்து தனக்குஅருகில் அமர்ந்திருந்த பெண்ணுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

இதற்குஅப்பெண் எதிர்ப்பைத் தெரிவித்த போதிலும் சந்தேக நபர் தொடர்ந்தும் இச்செயலில்ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து,அப்பெண் ஆசனத்திலிருந்து எழுந்து பேருந்திலிருந்த ஏனைய பயணிகளிடம் இதுதொடர்பில் தெரிவித்துள்ளார்.

பயணிகளின்கோரிக்கையையடுத்து பஸ் சாரதி இதுபற்றி முந்தல் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.