முல்லைத்தீவில் மக்கள் ஆர்ப்பாட்டம்!!

முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரை நியமிக்குமாறுகோரி மக்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.


 முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு முன்பாக ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான மக்கள் முல்லைத்தீவு உண்ணாப்புலவு பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரை நியமிக்குமாறு கோரி போராட்டத்தை முன்னெடுத்து தற்போது வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குள் புகுந்து  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் காரணமாக பொலிஸார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர் .

இந்த போராட்டத்தின் காரணமாக முல்லைத்தீவு நகரின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளது . முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடியுள்ளதோடு கடற்தொழில் நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.