எதிர்கால சந்ததிக்காக நாட்டு வளங்களைப் பாதுகாப்போம் – மஹிந்த!!

யாழ். மாவட்டத்தில் உருளைக் கிழங்கு பயிர் செய்கையில் படைப்புழுவின் தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.


அச்சுவேலி – செல்வநாயகபுரத்தில் 127 ஏக்கரில் உருளைக் கிழங்கு பயிர் செய்கை மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், குறித்த பகுதியில் முதன்முறையாக படைப்புழுவின் தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சுமார் 10 ஏக்கர் பரப்பில் பயிர் செய்யப்பட்டுள்ள உருளைக் கிழங்கினையே இவ்வாறு படைப்புழு தாக்கியுள்ளது.

உருளைக் கிழங்கினை அறுவடை செய்யவிருந்த நிலையில், படைப்புழு தாக்கியுள்ளமையினால் தாம் பலத்த சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ். மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சென்றிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் வேப்பம் பிரித்தெடுப்பு கரைசலை தௌிப்பதன் மூலமும் இரசாயன கிருமி நாசினிகளைப் பயன்படுத்தியும் இதனைக் கட்டுப்படுத்தலாம் என விவசாய திணைக்கள அதிகாரி ஒருவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.