என் செய்தாய் செந்தீயே???
என் செய்தாய் தீயே தீராத பசியோ??
அன்று அமேசன் இன்று ஆஸி.. நாளை..?
உனக்கான வேலை இவ்வுலகெல்லாம்
எத்தனை இடங்களில் உண்டு அங்கு செல்.
அணுகுண்டு ஆயிரம் உருவாக்கி வைத்து
உயிர் நலங் கருதாது அடியோடு கருவறுக்க
அழிவு புரிய காத்திருக்கும் அயோக்கினை
அடியோடு எரித்து விடு செல் அவனிடம்.
அண்டத்தின் சாபக் கேடுகள் தன்னை
அத்திவாரத்தோடு பிடுங்கி எறிந்துவிடு.
பிறக்கும் போது அம்மணமாய் வந்துவிட்டு
இறக்கும் போதும் எதுவுமே கைக்கொண்டு
இங்கிருந்து எடுத்து போக உரிமையில்லை.
இனிவரும் இயற்கையை உருக்குலைக்கும்
ஆவணத்தை எப்படி பெற்றான் சீ கேவலம்
அவன் கோவணம்கூட மீதமின்றி எரித்துவிடு
போர்,போர் என முழங்கும் சீழ் மனம் தன்னை
தார் போல் உருக்கி தெருவோடு போட்டுவிடு
தன்னுடல் வளர மன்னுயிர் வதைப்பார்க்கு
தக்க பாடம் தன்னை தவறாமல் புகட்டிவிடு
பெண்ணை பிய்த்தெறிந்து கொள்பவனை
கண்ணை இமைக்குமுன் கருவறுத்துவிடு
கால் போன போக்கில் களவுகள் புரிபவர்க்கு
காலில் ஒரு சூடு கண்டிப்புடன் போட்டுவிடு
கண்கண்ட பெற்றவரை கதற விட்டோர்க்கு
கையிரண்டிலும் கருத்தோடு கோடு போடு
கள்ளச் சாமியார்களை கண்டு பிடித்து
கண்டிப்பான இடத்தில் சுட்டு கல்வி புகட்டு
உனக்கான கடமை எவ்வளவு கண்டாயா???
கண்டபடி ஏன் சீற்றம் கொண்டாய் கனலே??
பஞ்சணைய பாதங்கள் வெந்ததை பார்
நெஞ்சோடு அணைத்தபடி குட்டியை பார்
குருவி கூட்டில் குஞ்சோடு கருகியதை பார்
அருவியை தேடி ஓடும் அப்பாவிகளைப் பார்
தாகத்தில் நாக்குத் தள்ளித் தவிப்பதை பார்
சோகத்தில் தேசமே துவள்வதைப் பார்
வெம்மையில் முனகிடும் ஈனக்குரல் பார்
அம்மை போல் நான் அழுது துடிப்பதை பார்
என் குஞ்சுகளையும் என்னையும் இன்று
கல் நெஞ்சம் கொண்டு கதிகலக்கிவிட்டாய்
கட்டாயம் கைம்மாறு செய்தே தீர வேண்டும்
செல் உன் காருண்யமற்ற தன்மைவிட்டு
நான் சொன்ன கடமைகளை கைக்கொள்க!
கடமை மறந்த மேகக் கூட்டங்களே வருக
கண்ட இடமெல்லாம் காட்டாறு வெள்ளம்
இங்கு கருகும் முன்னே காக்க வேண்டாமா?
பசு தன் கன்றுக்காக கனத்த மடியுடன்
பட்டி தேடி ஓடி வந்து பால் சொரிவது போல்
பற்றி எரியும் கனலை தணிப்பாய் - எம்
பாரினை மரஞ்செடியாய் நிழலாய் காப்பாய்.
உலக அமைதிக்காக பிரார்த்தனை புரிக
வாழும் காலத்தில் நிழல் மரம் நடுக
-கரிணி-
06.01.2020 எசன் யேர்மனி
அன்று அமேசன் இன்று ஆஸி.. நாளை..?
உனக்கான வேலை இவ்வுலகெல்லாம்
எத்தனை இடங்களில் உண்டு அங்கு செல்.
அணுகுண்டு ஆயிரம் உருவாக்கி வைத்து
உயிர் நலங் கருதாது அடியோடு கருவறுக்க
அழிவு புரிய காத்திருக்கும் அயோக்கினை
அடியோடு எரித்து விடு செல் அவனிடம்.
அண்டத்தின் சாபக் கேடுகள் தன்னை
அத்திவாரத்தோடு பிடுங்கி எறிந்துவிடு.
பிறக்கும் போது அம்மணமாய் வந்துவிட்டு
இறக்கும் போதும் எதுவுமே கைக்கொண்டு
இங்கிருந்து எடுத்து போக உரிமையில்லை.
இனிவரும் இயற்கையை உருக்குலைக்கும்
ஆவணத்தை எப்படி பெற்றான் சீ கேவலம்
அவன் கோவணம்கூட மீதமின்றி எரித்துவிடு
போர்,போர் என முழங்கும் சீழ் மனம் தன்னை
தார் போல் உருக்கி தெருவோடு போட்டுவிடு
தன்னுடல் வளர மன்னுயிர் வதைப்பார்க்கு
தக்க பாடம் தன்னை தவறாமல் புகட்டிவிடு
பெண்ணை பிய்த்தெறிந்து கொள்பவனை
கண்ணை இமைக்குமுன் கருவறுத்துவிடு
கால் போன போக்கில் களவுகள் புரிபவர்க்கு
காலில் ஒரு சூடு கண்டிப்புடன் போட்டுவிடு
கண்கண்ட பெற்றவரை கதற விட்டோர்க்கு
கையிரண்டிலும் கருத்தோடு கோடு போடு
கள்ளச் சாமியார்களை கண்டு பிடித்து
கண்டிப்பான இடத்தில் சுட்டு கல்வி புகட்டு
உனக்கான கடமை எவ்வளவு கண்டாயா???
கண்டபடி ஏன் சீற்றம் கொண்டாய் கனலே??
பஞ்சணைய பாதங்கள் வெந்ததை பார்
நெஞ்சோடு அணைத்தபடி குட்டியை பார்
குருவி கூட்டில் குஞ்சோடு கருகியதை பார்
அருவியை தேடி ஓடும் அப்பாவிகளைப் பார்
தாகத்தில் நாக்குத் தள்ளித் தவிப்பதை பார்
சோகத்தில் தேசமே துவள்வதைப் பார்
வெம்மையில் முனகிடும் ஈனக்குரல் பார்
அம்மை போல் நான் அழுது துடிப்பதை பார்
என் குஞ்சுகளையும் என்னையும் இன்று
கல் நெஞ்சம் கொண்டு கதிகலக்கிவிட்டாய்
கட்டாயம் கைம்மாறு செய்தே தீர வேண்டும்
செல் உன் காருண்யமற்ற தன்மைவிட்டு
நான் சொன்ன கடமைகளை கைக்கொள்க!
கடமை மறந்த மேகக் கூட்டங்களே வருக
கண்ட இடமெல்லாம் காட்டாறு வெள்ளம்
இங்கு கருகும் முன்னே காக்க வேண்டாமா?
பசு தன் கன்றுக்காக கனத்த மடியுடன்
பட்டி தேடி ஓடி வந்து பால் சொரிவது போல்
பற்றி எரியும் கனலை தணிப்பாய் - எம்
பாரினை மரஞ்செடியாய் நிழலாய் காப்பாய்.
உலக அமைதிக்காக பிரார்த்தனை புரிக
வாழும் காலத்தில் நிழல் மரம் நடுக
-கரிணி-
06.01.2020 எசன் யேர்மனி
கருத்துகள் இல்லை