தனிமை.. !மீளா துரோகம் அவமானம்...!!
தோல்விகள்
வாழ்வில் விரக்தி
தனிமை.. மீளா துரோகம்
அவமானம்...
அத்தனையும் கொத்தித் தின்ற
காயங்களின் ரணங்கோடு
கண்ணீர் கடலில்
கணங்கள் கடுக்க நின்ற போது
பேரலையாய் மிதந்து வந்து
என் உயிர் குடிக்கப் பார்த்த
"தற்கொலையே" உன் நினைவு
எனக்கு வேண்டாம்.
சோதனையும் வேதனையும்
சேர்ந்து வந்து தாக்கிடனும்
தன்நம்பிக்கையே துணை எனக்கு.
வாழ்வா.. சாவா... என்ற
தடுமாற்றத்தில் கை கொடுக்க
தற்கொலையே நீ வரதே..
உன்னிடம் சிறைப்பட்டு
என் சிந்தையை அழித்திட
சிறிதும் மனமில்லை.
எனக்கு நீ வேண்டாம்.
என் கஷ்டமெல்லாம்
என் கால்களாலே கடப்பேன்
கல்லறைக்கு வழிகாட்ட தூக்க மாத்திரையே
எனக்கு நீ வேண்டாம்.
என் நஷ்டமெல்லாம்
நானே வெல்வேன்
இஷ்டமில்லை துாக்குக் கயிறே
எனக்கு நீ வேண்டாம்.
தனிமையின் விளிம்பில்
தடுமாறும் போது
பின்னிருந்து தள்ளி விடப்பார்க்காதே
உடல் சிதறி உருக்குலைக்க எண்ணும்
நீ எனக்கு வேண்டாம்.
விரக்தி தீயில் வெந்து போன நெஞ்சை
அணைத்துக்கொள்ள தீயே
உன் அணைப்பு
எனக்கு நீ வேண்டாம்.
அயராமல் எத்தனிப்பேன்..
என்னை நானே விஸ்தரிப்பேன்..
இப்படியே இருந்துவிடேன்..
உனை நான் நெருங்கவிடேன்....
சாவு என்றும் தீர்வல்ல...
புறம் காட்டி ஓடிடு
உன் எண்ணம் எவர் மனதிலும்
எழா வண்ணம் எழுதி வைப்பேன்
இக்கவியை...
-சங்கரி சிவகணேசன்-
புத்தூர்
06.01.2020
வாழ்வில் விரக்தி
தனிமை.. மீளா துரோகம்
அவமானம்...
அத்தனையும் கொத்தித் தின்ற
காயங்களின் ரணங்கோடு
கண்ணீர் கடலில்
கணங்கள் கடுக்க நின்ற போது
பேரலையாய் மிதந்து வந்து
என் உயிர் குடிக்கப் பார்த்த
"தற்கொலையே" உன் நினைவு
எனக்கு வேண்டாம்.
சோதனையும் வேதனையும்
சேர்ந்து வந்து தாக்கிடனும்
தன்நம்பிக்கையே துணை எனக்கு.
வாழ்வா.. சாவா... என்ற
தடுமாற்றத்தில் கை கொடுக்க
தற்கொலையே நீ வரதே..
உன்னிடம் சிறைப்பட்டு
என் சிந்தையை அழித்திட
சிறிதும் மனமில்லை.
எனக்கு நீ வேண்டாம்.
என் கஷ்டமெல்லாம்
என் கால்களாலே கடப்பேன்
கல்லறைக்கு வழிகாட்ட தூக்க மாத்திரையே
எனக்கு நீ வேண்டாம்.
என் நஷ்டமெல்லாம்
நானே வெல்வேன்
இஷ்டமில்லை துாக்குக் கயிறே
எனக்கு நீ வேண்டாம்.
தனிமையின் விளிம்பில்
தடுமாறும் போது
பின்னிருந்து தள்ளி விடப்பார்க்காதே
உடல் சிதறி உருக்குலைக்க எண்ணும்
நீ எனக்கு வேண்டாம்.
விரக்தி தீயில் வெந்து போன நெஞ்சை
அணைத்துக்கொள்ள தீயே
உன் அணைப்பு
எனக்கு நீ வேண்டாம்.
அயராமல் எத்தனிப்பேன்..
என்னை நானே விஸ்தரிப்பேன்..
இப்படியே இருந்துவிடேன்..
உனை நான் நெருங்கவிடேன்....
சாவு என்றும் தீர்வல்ல...
புறம் காட்டி ஓடிடு
உன் எண்ணம் எவர் மனதிலும்
எழா வண்ணம் எழுதி வைப்பேன்
இக்கவியை...
-சங்கரி சிவகணேசன்-
புத்தூர்
06.01.2020
கருத்துகள் இல்லை