7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி!!

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.


மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பெரேரா 34 ரன்கள் சேர்த்தார். ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், நவதீப் சைனி, குல்தீப் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

143 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ராகுல் 45 ரன்களும், தவான் 32 ரன்களும் எடுத்தனர்.

ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில், விராட் கோலி 30 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 17.3 ஓவரில் 3 விக்கெட்டை இழப்பிற்கு 144 ரன் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது.

முதல் போட்டி கைவிடப்பட்ட நிலையில், தற்போது வெற்றி பெற்றுள்ளதால் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டி20 போட்டி வெள்ளிக்கிழமை புனேவில் நடைபெறுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.