வருகிறார் மாஃபியா குயின்!

பிரபல இந்தித் திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி அடுத்து இயக்க இருக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. “கங்குபாய் கதியாவாடி” என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் கங்குபாயாக ஆலியா பட் நடிக்கிறார். நாடு முழுவதும் மிகுந்த சர்ச்சைகளையும், விமர்சனங்களையும், பெற்று வெளியாகி வெற்றி பெற்ற “பத்மாவத்” திரைப்படத்தை அடுத்து இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மீண்டும் தயாரித்து, இசையமைத்து, எழுதி இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார்.



எழுத்தாளர் ஹுசைன் சய்தி எழுதிய “மாஃபியா குயின்” புத்தகத்தில் இடம்பெற்ற கங்குபாய் பற்றிய கதையைத் தழுவி இப்படம் எழுதப்பட்டுள்ளது. ஏற்கனவே இவருடைய மும்பை அவெஞ்சர்ஸ், ப்ளாக் ஃப்ரைடே புத்தகங்கள் இந்தியில் ஃபான்டம்(கபீர் கான்) மற்றும் ப்ளாக் ஃப்ரைடே(அனுராக் கஷ்யப்) என்ற பெயரில் திரைப்படங்களாகத் தழுவி எடுக்கப்பட்டுள்ளன. தனது எழுத்துகளால் மும்பை மாஃபியா உலகின் தோலுரித்துக் காட்டிய ஹுசைனின் முக்கியமான படைப்பான ‘மாஃபியா குயின்’ திரைப்படமாக உருவாகுவது எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.


தன்னுடைய பிரமாண்ட விஷுவல்கள் மற்றும் சிந்தனைகளால் இதுவரை மெல்லிய உணர்வுகள் கொண்ட கனமான கதைகளை சொல்லி வந்த சஞ்சய் லீலா, இந்த முறை மாஃபியா உலகில் மிகப்பெரிய ஆளுமையாக விளங்கிய பெண் கதாபாத்திரத்தை கையில் எடுத்துள்ளார்.


கங்குபாய் 1939ஆம் வருடம், குஜராத்தின் காத்திர்வார் மாவட்டத்தில் அவரது பெற்றோருக்கு ஒரே மகளாய் பிறந்தார். தன்னுடைய 16ஆவது வயதில் காதல் கணவனை நம்பி மும்பைக்கு திரைப்படங்களில் நடிக்கும் கனவுகளோடு வந்தார். ஆனால் அவரோ 5௦௦ ரூபாய்க்கு மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில் விற்றுச் சென்றார். இனி திரும்பிச் சென்றால் வீட்டில் சேர்க்க மாட்டார்கள் என்று எண்ணி சூழ்நிலையால் ஹீரா மண்டி பகுதியில் பாலியல் தொழிலாளியாக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். 

போதைப் பொருட்களை சந்தைப்படுத்துவது, கூலிக்கு கொலைகள் செய்வது, குற்றவாளிகள் பதுங்க உதவி செய்வது என்று இருந்தவர். பின்பு மிகப்பெரிய லேடி டானாக உருவெடுத்தார். 6௦களில் மும்பை மாபியாவை தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருந்தார். தன் வாழ்நாள் முழுவதும் ஹீரா மண்டி பகுதியில் வாழ்ந்த மற்ற பாலியல் தொழிலாளிகளுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக விளங்கினார். அரசாங்கத்திடம் அவர்கள் நலம் காக்க முறையிட்டவர் என இவர் வாழ்க்கை பல்வேறு திருப்பங்கள் நிறைந்தது.
இந்தக் கதையை சொல்லும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சினிமா ரசிகர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறது. இதனுடன் செப்டம்பர் 11ஆம் தேதி ரிலீஸாகும் என்ற அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.