கல்முனை ஆலய மடத்து வழக்கின் வரலாற்று தீர்ப்பு!!

கல்முனை தரவை பிள்ளையார் ஆலய மடத்து வளவிற்கான இறுதித் தீர்ப்பு இன்று காலை நீதி மன்றத்தினால் நீதி நிலைநாட்டப்பட்டு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.


கடந்த முப்பது வருடத்திற்கு மேல் பேசப்பட்ட இவ்வழக்கு இன்றுதான் நிறைவடைந்துள்ளது.

குறித்த வழக்கில் பலசட்டத்தரணிகள் வாதாடினாலும் சட்டத்தரணி கே. நாராயனபிள்ளை ஐயாவின் வாதத் திறமை பாராட்டக் கூடியது என ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

குறித்த ஆலய மடத்து வளவு 1960 ம் வருடம் ஆலய தொண்டுக்காக (அடப்பர்) பராமரிப்பதற்காக கிராமத்தவர் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த நபரினால் அவரது மகனுக்கு 1961ல் கள்ள உறுதி முடிக்கப்பட்டு அயலவருக்கு விற்கப்பட்ட நிலையில் இறுதித் தீர்ப்பு இன்று சாதகமாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவ் வழக்கின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் ஆலயம் சார்பான பாராட்டுக்களுகளையும் நன்றிகளையும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.