ஜப்பானில் இதயத்தை கொண்டு சென்ற ஹெலிகொப்டர் விபத்து!!

ஜப்பானில் இதயத்தை கொண்டு சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.


இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக இதயத்தை கொண்டுச் சென்ற ஹெலிகொப்டரே இன்று (சனிக்கிழமை) காலை 8:10 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஐசுவகமட்சு நகரில் உள்ள புகுஷிமா மருத்துவமனையிலிருந்து மாகாண விமான நிலையத்திற்கு செல்லும் வழியிலேயே, கோரியமா நகரில் ஒரு நெல் வயலில் விழுந்து குறித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது.

இதில், மூன்று பொலிஸ் அதிகாரிகள், இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இரண்டு மருத்துவ ஊழியர்கள் இருந்தனர்.

மருத்துவ ஊழியர்களில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாகவும், ஆனால் அது உயிராபத்தான காயங்கள் இல்லை எனவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து, இதுவரை எவ்வித தகவலும் வெளியிடப்படாத நிலையில், இவ்விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.