பூட்டப்பட்டது கொழும்பின் சில வீதிகள்!!

கொழும்பின் சில வீதிகள் இன்று (திங்கட்கிழமை) மூடப்படவுள்ளன என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வௌியிட்டுள்ள பொலிஸ் தலைமையகம், இந்த நடவடிக்கை இன்று காலை 7 மணி முதல் மதியம் 12 வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

72ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகை நடவடிக்கைகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நிதஹஸ் மாவத்தை, வித்யா மாவத்தை, மெட்லன் பிளேஸ், மெட்லான் கிரசன்ட், சீ.டபிள்யூ.பி கண்ணங்கர மாவத்தை, மார்கஸ் பெர்ணான்டோ மாவத்தை, பதனம் வீதி, விஜேராம வீதி ஹோர்டன் சுற்றுவட்டம் வரை இவ்வாறு மூடப்படவுள்ளது.

அதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களிடமும் சாரதிகளிடமும் பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.