மட்டக்களப்பு முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து விபத்து!!

மட்டக்களப்பு முகத்துவாரத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் இந்த விபத்தில் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் இருந்து மூன்று மீனவர்கள் இன்று (புதன்கிழமை) காலை முகத்துவாரம் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இதன்போது பாரிய கடல் அலையில் சிக்கி மீன்பிடி படகு கவிழ்ந்த நிலையில், மூன்று மீனவர்களும் கடலில் வீழ்ந்துள்ளனர்.

கவிழ்ந்த படகினை பிடித்துக்கொண்டு மீனவர்கள் சத்தமிட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஏனைய மீனவர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து மீனவர்களை காப்பாற்றியுள்ளனர்.

மீனவர்கள் விரைந்து வந்து உதவியதன் காரணமாக கடலில் மூழ்கிய மூன்று மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், கடலில் மூழ்கிய படகும் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டது.

குறித்த படகு மற்றும் படகின் இயந்திரம் சேதமடைந்துள்ளதுடன், வலைகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.