ராஜிதவையும் , ரஞ்சனையும் பாதுகாத்த கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்னவும், ரஞ்சன் ராமநாயக்கவும் பாதுகாக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஸாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.


அத்துடன் இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில் மக்கள் இவ்வாறானவர்களை பாதுகாக்காது புறக்கணிக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தாக்குதலின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன் ராமநாயக்க, ராஜித்த ஆகிய இருவர் மாத்திரமே நன்மை பெற்றுள்ளதாகவும், அவர்களின் தலைப்பு செய்தியை இன்று கொரோனா கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தின் பாரம்பரிய கோட்பாடுகளுக்கு பங்கம் விளைவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, குறுகிய அரசியல் தேவைகளுக்காக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசியல் நாடகத்தை அரங்கேற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன உள்ளிட்டோர் பாதுகாக்கப்படாது புறக்கணிக்ககப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையிலான அரசாங்கம் நிச்சயம் தோற்றம் பெறும் என்றும், ஐக்கிய தேசிய கட்சியை பிறர் வீழ்த்த வேண்டிய தேவை கிடையாது எனவும் பியல் நிஸாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் கட்சிக்குள் தற்போது தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகள் உத்திரமடையும் வேளையில் கட்சி சுயமாகவே வீழ்ச்சியடையும் எனக்குறிப்பிட்ட அவர் , பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தலைமையில் பொதுத்தேர்தலுக்காக வகுக்கப்பட்ட திட்டங்கள் இம்மாதம் முதல் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.