ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகே “ஆர்ப்பாட்ட இடம்” அமைக்கப்பட்டுள்ளது!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகே, “ஆர்ப்பாட்ட இடம்” என புதிதாக அடையாளமிடப்பட்ட பலகை அமைக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு ஒதுக்கப்பட்ட புதிய இடம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இன்று அந்த பகுதிக்கு சென்ற பொதுமக்கள் இதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

அந்தவகையில் ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு வருபவர்கள் வாகனங்களை தரித்து நிறுத்தும் வாகன தரிப்பிடத்தில் இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் காலி முகத்திடலில் பிரதான வீதியைத் தடுத்து ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு முன்பாக பல போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.