குவைத்திலிருந்து வந்தவர் விமானநிலையத்தில் கைது!

வெளிநாட்டு சிகரெட் வகைகளை இலங்கைக்கு கொண்டு வந்த நபரொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


43 வயதுடைய குவைத் நாட்டிலிருந்து வந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் குருநாகல் பகுதியை சேர்ந்த​ வியாபாரியென விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபருடைய பையிலிருந்து 35,240 சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மொத்த பெறுமதி இலங்கை மதிப்பீட்டில் 62 இலட்சம் ரூபாயெனவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.