ராஜபக்சாக்களால் நடந்துசென்ற மைத்திரி!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய சுதந்திர தின நிகழ்வை ஏன் புறக்கணிக்கார் என்ற கேள்வி பலருடைய மனங்களிலும் உள்ளது.


இந்நிலையில் அதற்கான காரணம் என்ன என்பது தற்பொழுது வெளியாகியுள்ளது.

ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாஷிமின் புதல்வியின் திருமணத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரியும் சென்றிருந்தார்.

அப்போது பிரதமரும், ஜனாதிபதியும் மண்டபத்தில் இருந்ததினால் மண்டப வளாகத்தில் பலமடங்கு பாதுகாப்பு இடப்பட்டிருந்தது.

இதனிடையே அங்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மண்டபத்திலிருந்து சுமார் ஒருகிலோ மீற்றர் தூரத்திலேயே பாதுகாப்பு குழுவினர் நிறுத்தியதுடன் அங்கிருந்து அவரை நடக்கவைத்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்த நிலையில் அதே நிலைமை சுதந்திர தினத்தன்றும் தனக்கு ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக நிகழ்வுக்கு வருவதை அவர் தவிர்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை மொட்டுச் சின்னத்தில் பொலனறுவை மாவட்டத்தில் தனக்கு போட்டியிட சந்தர்ப்பம் மறுக்கப்பட்டதாலேயே சுதந்திர தின நிகழ்வை மைத்திரி புறக்கணித்ததாகவும் மற்றுமொரு செய்தியும் பரவிவருகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.