தீப்பற்றியது தேங்காய் ஆலை!!

கம்பஹாவின் பெம்முல்லவில் உள்ள பாரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலை இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.


கம்பகா நகரசபையின் தீயணைப்பு படை, பெம்முல்லா,கம்பகா காவல்துறை மற்றும் இராணுவத்தின் வெயாங்கொட முகாம் வீரர்கள் இணைந்து தீயை அணைக்க பாடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்ட ரன்தெனிய இன்ரநஷனல் கம்பெனி மற்றும் தொழிற்சாலையில் இருந்து பல வெளிநாட்டு நாடுகள் வெள்ளை தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்கின்றன.

தீ விபத்து ஏற்பட்டவேளை வெள்ளை தேங்காய் எண்ணெய் பெருமளவில் ஏற்றுமதிக்கு தயாராக இருந்ததாகவும் அவை அனைத்தும் பற்றியதால் பில்லியன் கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கம்பகா நகர மேயர் எரங்கா சேனநாயக்க கூறுகையில், தீயை அணைக்க 10 தீ குண்டுகள் மற்றும் 10 நீர் பவுசர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பெம்முல்லா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.