காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான பட்டியலைத் தயாரிக்க முடிவு!!

காணாமலாக்கபட்டடோர் தொடர்பான பட்டியல் ஒன்றை தயாரிக்கவுள்ளதாக காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


இந்த விடயம் தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள அந்த அலுவலகம், “தற்போதுவரையில் இலங்கையில் காணாமல் போனோர் அல்லது காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விரிவான பட்டியல் ஒன்று தயாரிக்கப்படவில்லை.

காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தற்காலிக பட்டியல் ஒன்று தயாரிக்கப்படவுள்ளது.

2018ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் உருவாக்கப்பட்டதன் பின்னர் பெறப்பட்ட அனைத்து முறைப்பாடுகள், முப்படையினர் வழங்கியுள்ள தரவுகள் உள்ளிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முழுமையான பட்டியலை தயாரிப்பதற்காக முன்னைய ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் உள்ளடங்களாக ஏனைய மூலங்களில் தரவுகளை சேகரிக்க ஆரம்பித்துள்ளது.

தமது உறவுகள் தொடர்பான தரவுகள் குறித்த பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிந்துகொள்வதற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வார நாட்களில் தமது அலுவலகங்களுக்கு சமூகமளிக்க முடியும்.

அத்துடன் 0112056504 அல்லது 0112667108 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்புகொள்ள முடியும்” எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.