ஊர்காவற்துறை கடற்தொழிலாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை!

யாழ்ப்பாணம் அராலித் துறையில் கடற்தொழில் செய்வதற்கு அனுமதிக்குமாறு ஊர்காவற்துறை கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வேலணை கிழக்கு பகுதியான அராலிதுறையில் கடற்படை மற்றும் இராணுவத்தினர் முகாமிட்டு இருப்பதனால் பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டுவரும் கடற்தொழிலாளர் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்.

அத்துடன் அவர்கள் கடற்றொழிலுக்கு செல்வதாயின் நீண்ட கடல் மைல் தூரம் சுற்றியே தொழில் செய்யவேண்டிய நிலையுள்ளது.

இந்நிலையில் நீண்டகாலமாக குறித்த பகுதியில் தொழில் செய்வதற்கு தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றபோதும் சாதகமான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை.

குறித்த கடற்பகுதியில் பாரம்பரியத் தொழில் முறையில் சிறு தொழில் முயற்சியே இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக வீச்சு வலை முரல் வலை கோர் வலை போன்றதொழில்களே அங்கு மேற்கொள்ளப்படுகின்றது.

இந்தத் தொழில் முறையானது எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத முறையிலேயே மீ நவர்கள் தொழிலை மேற்கொண்டு வருகின்றார்கள்.

எனினும் நீண்ட காலமாக கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் இப் பகுதியில் நிலைகொண்டிருப்பதால் சுமார் 100 குடும்பங்கள் வரையில் இதனால பாதிப்பை சந்தித்தவண்ணமுள்ளார்கள்.

அதோடு அங்குள்ள தம்பாட்டி சின்னமடு வேலணை சாட்டி பகுதிகளைச் சேர்ந்த சிறுகடல் தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்க.

எனவே அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு குறித்த பகுதியில் தொழில் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.