மன்னார் மனிதப்புதைகுழி விவகாரம்- சட்டத்தரணிகள் வெளிநடப்பு!!

மன்னார் மாவட்டத்தில் சதொச கட்டிடத்தில் கடந்த வருடம் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்றையதினம் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.


இதன் போது அரச சட்ட வைத்திய அதிகாரி மற்றும் அவர்கள் குழு சார்பாக ஆஜராகிய அரச சட்டத்தரணி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக வாதிட வந்த சட்டத்தரணிகள் ஆஜராவதை எதிர்த்துள்ளனர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக வாதிடும் சட்டத்தரணிகள் மீது அரச சட்டத்தரணி தகாத வார்த்தைப் பிரயோகத்தினை பயன்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜராகிய அனைத்து சட்டத்தரணிகளும், மன்னார் சட்டத்தரணிகளும், குறித்த அரச சட்டத்தரணிக்கு எதிராகவும், அவரின் வார்தை பிரயோகத்திற்கு மன்னிப்பு கோரும் வரை நீதி மன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து வெளியேறினர்.

அதன் பின்னர் அரச சட்டத்தரணி மன்னிப்பு கோரியதை தொடர்ந்து மீண்டும் வெளிநடப்பு செய்த மன்னார் சட்டத்தரணிகள் நீதி மன்றுக்கு சமூகம் அளித்ததை தொடர்ந்து மீண்டும் மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கானது தற்போது விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.