பூசகரின் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை!

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 6ம் கட்டை பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயனன் வளாகத்தில் பூசகரின் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் 19 வயதான நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் குறித்த நபர் இந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 06 ஆம் திகதி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்ரீ லட்சுமி நாராயணன் கோயில் வளாகத்தினுள்ளே பூசகர்களுக்கென வழங்கப்பட்டுள்ள வீட்டிலேயே அவர் தற்கொலை செய்த நிலையில் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்தாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இச்சம்மபவம் தொடர்பான மேலதிக விசாரணையை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.