பதற்றத்தில் யாழ்.தொழிநுட்ப கல்லூரி- இராணுவம் ,பொலிஸாா் குவிப்பு!

யாழ்.தொழிநுட்ப கல்லூரி மாணவா்கள் இருவருக்கிடையில் உருவான வாய்த்தா்க்கம் வாள்வெட்டு மோதலாக மாறியதில் 3 ஆசிரியா்கள் காயமடைந்துள்ளனர்.


இந்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் மோதலில் ஈடுபட்ட தொழிநுட்ப கல்லுாரி மாணவனும், தாக்குதல் நடாத்த வந்த வாள்வெட்டு குழு ரௌடியும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சம்பவம் தொடா்பில் தெரியவருகையில்,

தொழில் நுட்ப கல்லூரி மாணவா்கள் இருவருக்கிடையில் தா்க்கம் உருவாகியதை அடுத்து கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இரு மாணவா்களும் மோதலில் ஈடுபட்டிருக்கின்றனா்.

இதனையடுத்து மோதலில் ஈடுபட்ட மாணவா்களில் ஒருவா் வெளியில் இருந்து ரவுடி கும்பல் ஒன்றை உதவிக்கு அழைத்துள்ளார்.

அங்கு வந்த ரவுடிகள் கல்லூரி சுவர் ஏறி பாய்ந்து உள்ளே நுழைந்து மோதலில் ஈடுபட்டிருக்கின்றனா். இதனை அவதானித்த ஆசிரியா்கள் சிலா் அவா்களை தடுக்க முயன்றபோது,ஆசிரியா்கள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதில் 3 ஆசிரியா்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியதை அடுத்து ,வெளியிலிருந்து தாக்குதல் நடாத்த உள்ளே நுழைந்த ரவுடிகளில் ஒருவனை ஆசிரியா்களும், மாணவா்களும் இணைந்து மடக்கி பிடித்திருக்கின்றனா்.

இதனையடுத்து சுமாா் 15 தொடக்கம் 20 ரவுடிகள் வாள்களுடன் தொழிநுட்ப கல்லூரிக்குள் நுழைந்து பிடித்து வைக்கப்பட்டிருந்த ரவுடியை மீட்பதற்கு முயற்சித்துள்ளனா்.

எனினும் அதற்குள் பொலிஸாருக்கும், இராணுவத்தினருக்கும் தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்து வந்ததால் ரவுடிகள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனா்.

அதன் பின்னா் மடக்கி பிடிக்கப்பட்ட ரவுடியையும், மோதலில் ஈடுபட்டிருந்த மாணவனையும் பொலிஸாா் கைது செய்துள்ளனா்.

மேற்படி சம்பவத்தையடுத்து தொழில்நுட்ப கல்லூரி சுற்றாடலில் இராணுவம் மற்றும் பொலிஸாா் குவிக்கப்பட்டு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.