தியதலாவ முகாமிலிருந்த மாணவர்கள் வெளியேற்றம்!


சீனா வுஹான் நகரில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தியதலாவ இராணுவ முகாமின் விசேட மத்திய நிலையத்தில் தங்கவைத்து கண்காணிக்கப்பட்டு வந்த 33 இலங்கை மாணவர்களும் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இன்று முற்பகல் 10.00 மணியளவில் இராணுவத்தினரால் குறித்த மாணவர்கள் இராணுவ தலைமையகம் நோக்கி விசேட பஸ்ஸில் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
Blogger இயக்குவது.