தங்கத்துடன் சிக்கிய இருவர் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து மாதகல் கடற்பரப்பு ஊடாக இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முற்பட்ட இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைதாவர்களிடமிருந்து சுமார் 137 மில்லியன் (13 கோடியே 70 லட்சம் ரூபா) பெறுமதியான தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து நேற்று மாலை மாதகல் கடற்பரப்பில் பயணித்த டிங்கி படகு ஒன்று சோதனைக்குட்படுத்திய போதே, 14 கிலோ 300 கிராம் தங்கக் கட்டிகள் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மாதகலைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைதானவர்களும் மீட்கப்பட்ட தங்கக் கட்டிகளும் யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.